தமிழகத்தில் 5,000-க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 4 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழே குறைந்துள்ளது. இன்று மட்டும் 4 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 4 ஆயிரத்து 804 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,742 பேர் ஆண்கள், 2,062 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment