சாரி... தடுப்பூசி இன்னும் வரல! சென்னையில் தடுப்பூசி முகாம்கள் ரத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 29, 2021

சாரி... தடுப்பூசி இன்னும் வரல! சென்னையில் தடுப்பூசி முகாம்கள் ரத்து!

தட்டுப்பாடு காரணமாக, நாளை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்தியாவில், கோவாக்சின் தடுப்பூசியும், கோவிஷீல்டு தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, தமிழகம், பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகமே தடுப்பூசி போட தயாராக இருப்பதாகவும், ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.


ஜூன் 29: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, ரத்து செய்யப்படுவதாகவும், தடுப்பூசி வந்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad