பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 28, 2021

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!






ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, அந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், உரிய சில விதிகளை தளர்த்தி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 28ஆம் தேதி, அவர் புழல் சிறையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோல் நிறைவடைய உள்ளது. ஆனால், ஜூன் 19ஆம் தேதி வரை மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து அளித்தால்தான் நன்மை என மருத்துவர்கள் கூறுவதால், பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad