இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.04.2021 (சனி)... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.04.2021 (சனி)...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.04.2021 (சனி)...

  • ஆன்லைனில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் – சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

  • மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் (TC) அவசியம் இல்லை - பஞ்சாப் மாநில கல்வித்துறை உத்தரவு

  • 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  • கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனுக்காக அமேசான் கிண்டிலில் ஆடியோ புத்தகங்கள் இலவசம் -  அமேசான் அறிவிப்பு.

  • 01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது - மத்திய அரசு சுற்றறிக்கை.

  • 👉01.01.2020 முதல் 30.06.2021 வரை (18 மாதங்கள்) அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது.

  • 👉1-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020

  • குழந்தைகளின் மனநல பயிற்சி தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை   சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவு 

  • தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் . வாங்க ஆர்வமில்லாததால் தேங்கிக்கிடக்கின்றன. 

  • பயன் இல்லாத திட்டம் என கல்வியாளர்கள் வேதனை 

  • புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-'பி', மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  • பள்ளிக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை

  • தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 

  • பொதுப்பணிகள் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை - கருவூல அலகு IFHRMS திட்டம்  01.06.2020 முதல் நடைமுறைப்படுத்தியது முதன்மைச் செயலர் / ஆணையர், கருவூவம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் கானொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது e-SR தொடர்பான பணிகளை உடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - தொடர்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • 10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாதவர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

  • DSE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

  • ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம்

  • கொரோனா  பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பிளஸ் 2 பொதுத்தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தோவுக்குத் தயாராகும் வகையில் மீண்டும் இணையவழி பயிற்சி வகுப்புகளைத் தொடர கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

  • அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட  ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 

  • பிளஸ்2 வினாத்தாள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இருந்ததால் பலத்த பாதுகாப்புடன்  மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு.

  • கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைககளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். 

  • -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

  • முழங்கால் காயம் காரணமாக நடராஜன் தொடரிலிருந்து விலகியுள்ளார் .

  • கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் இந்திய மக்களுடன் பிரான்ஸ் துணை நிற்கிறது.

  • இந்தியாவிற்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  • - பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மாக்ரோன்

  • செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

  • - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

  • மே மாதம் மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

  • - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  • கல்யாணம், துக்க காரியங்களில் அதிகம் கூடுவது , மத கூட்டம் நடத்துவது தான் தொற்று அதிகாரிக்க முக்கிய காரணம்.

  • - ஆணையர் பிரகாஷ்

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்ற மக்களின் கருத்து அறிக்கையாக தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பு.

  • பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறிக்கையை அரசுக்கு அனுப்பினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்

  • மாநிலங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க இந்திய இராணுவத்தை ஈடுபட செய்யுங்கள்.

  • - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை.

  • பிரதமர்  உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளையும்  ராணுவத்திடம்  ஒப்படைக்க  டெல்லி முதல்வர்  கோரிக்கை

  • கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

  • கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வரும் 26ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம் - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

  • கர்நாடகாவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு நீண்ட வரிசை இருப்பதால் குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கர்நாடக அரசு அனுமதி.

  • தற்போதய சூழலில் ஆக்சிஜன் தேவை; எனவே ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு

  • ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை 

  • - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து 

  • தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் 

  •  - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 

  • மே 2-க்கு பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை - மு.க.ஸ்டாலின்

  • மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

  • தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

  • சென்னையில் பொதுமக்களுக்கு முகக்கவசம், 30 முட்டை, சானிடைசர், சோப் உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • பிரபல பாகிஸ்தான் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'Edhi Foundation', இந்திய மக்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு கடிதம்.

  • மருத்துவ குழுக்களை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

  • இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

  • ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

  • சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாநகராட்சி அறிவிப்பு.

  • 2 அல்லது 3 மாறுபட்ட கொரோனா தொற்று ஒன்றிணைந்து வைரஸின் தோற்றம் மாறுபட்டுள்ளதால் RT-PCR சோதனை முறையை பயன்படுத்தி தொற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

  • - முதன்மை மருத்துவ ஆலோசகர், ஐரோப்பிய ஒன்றியம் & இந்தியா.

  • பாதுகாப்பான நிலையில் குப்புற படுத்துக் கொள்ளும் முறை - மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ள இந்த முறையில், சுவாசம் மேம்படுவதோடு, ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கும் என தகவல் 

  • முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையில் இயங்குகிறது சென்னை மெட்ரோ இரயில்

  • காலை 7 மணி - இரவு 9 மணி வரை விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 1 மணிநேரத்திற்கு ஒருமுறை

  • மத்திய இரயில் நிலையம் - விமான நிலையம் இடையே கோயம்பேடு வழியாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கம்

  • கொரோனா தொற்றுக்கு எதிரான சவாலை சந்திக்கும் இந்திய மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் துணை நிற்கும்.

  • மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியிடம் இது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன்.

  • - சார்லஸ் மைக்கல், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

  • மத்திய அரசு பல்வேறு நாடுகளில் இருந்து ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன், கொள்கலன்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை வாங்க உள்ளது.

  • ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன.

  • கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பாக இருப்போம், பக்கபலமாக இருப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • கொரோனா பரவல் குறையும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  • மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம். 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி. அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை. மாவட்டந்தோறும் நோய் பரவலுக்கு ஏற்ப பிராணவாயு வசதியுடன் தேவையான மருந்துகள் வழங்கப்படும் 

  • தமிழக அரசு அறிவிப்பு


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad