தொடக்கக் கல்வி அதிகாரியின் பணி வரன்முறை
தொடக்கக் கல்வி அதிகாரியின் பணிவரன்முறை செய்யக் கோரிய மனுவின் மீது, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியத்தில் தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய புனிதவதி என்பவா், 2008-ஆம் ஆண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், 2008 முதல் 2010-ஆம் ஆண்டு வரை கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டாா்.
தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரது கோரிக்கையைப் பரிசீலிக்க கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment