அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் பெற தனி உத்தரவு - அரசின் தடை நாளை முடிவு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விடுப்பு பெறுவதற்கான தடை நாளை நிறைவடைந்தால் சரண் விடுப்பு பணப்பலனை வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 முதல் 17 நாட்கள் வரை, ஈட்டிய விடுப்பு நாளாக உள்ளது. இந்த விடுப்பினை பயன்படுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும் அல்லது விருப்பப்படும் சமயத்தில், சரண்டர் செய்து, தங்களுக்கான பணப்பலனை பெற்றுக்கொள்ளலாம்.
இதனிடையே, கடந்த ஆண்டு கொரோனா சமயத்தில், ஈட்டிய விடுப்பிற்கான பணப்பலன் பெற, தமிழக அரசு தடை விதித்தது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் அதனை பெற முடியாமல் போனது. இந்நிலையில், அந்த தடையானது நாளையுடன் 27-ம் தேதி முடிவுக்கு வருவதாக, சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதன் பின்னர் சரண்டர் செய்து பலனை பெற்றுக்கொள்வது குறித்து எந்த ஒரு அனுமதியும்
வழங்கப்படவில்லை. இதனால், ஈட்டிய விடுப்பிற்கான பணப்பலன்களை பெறுவதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. எனவே, இதற்கென தனி உத்தரவை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்டம் தலைவர் நித்தியானந்தம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர், அரசு தலைமை செயலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், 'கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பிற்கான பணப்பலன் பெறுவதற்கான தடை, வரும் 27-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பை மீண்டும் பெறுவதற்கு, உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், தனி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment