அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் பணி நீக்கம்
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி நீக்கம்
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திலீப்குமார் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வேறு ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்- ளார்..
இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட் டத்தை சேர்ந்த முதுகலை தமிழாசிரியை ஒருவர் தேவூர் அரசு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். இவர், திலீப்குமாரின் வீட்டின் மேல் மாடியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்த தாக கூறப்படுகிறது. திலீப்குமாரின் மகன், மகள்கள் வெளியூ ரில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் அவர்களை பார்க்க திலீப்குமாரின் மனைவி அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் திலீப்குமாருக்கும், அவரது மேல் வீட்டில் வசித்து வந்த ஆசிரியைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள் ளுமாறு திலீப்குமாரிடம் அந்த பெண் ஆசிரியை வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் திருமணத்திற்கு அவர் மறுத்துவிட்டார்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment