சட்ட பல்கலையின் செமஸ்டர் தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த வாரம் வெளியீடு.
தமிழக சட்டப் பல்கலையின், செமஸ்டர் தேர்வானது, 'ஆன்லைன்' மூலம் நடைபெற்றது. தேர்வின் முடிவுகள், வரும் மே முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலையின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஸ்ரீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளி மற்றும் பல்கலையுடன் இணைப்பு பெற்ற சட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு, ஜன., முதல், மார்ச் வரை நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். மாணவர்கள், பல்கலை இணையதளத்தில், ஆன்லைன் வழியே தேர்வு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment