உடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

உடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..!

உடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..!


Sombu benefits in tamil / சோம்பு தண்ணீர் பயன்கள்: பொதுவாக நம் நாட்டு சமையலில் அதிகளவு சோம்பு (Fennel Seeds) பயன்படுத்துவார்கள். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் இந்த சோம்பு (Fennel Seeds) பயன்படுகிறது. சோம்பை சிலர் பெருஞ்சீரகம் என்று அழைக்கின்றனர், இந்த சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது. சரி வாங்க சோம்பு மருத்துவ குணங்கள் மற்றும்  சோம்பு பயன்கள் (fennel seeds benefits in tamil) ஆகியவற்றை இப்போது நாம் காண்போம்.

சோம்பு தண்ணீர் பயன்கள் (Perunjeeragam Health Benefits in Tamil) – செரிமான பிரச்சனைகளுக்கு:
sombu water benefits in tamil: சில சமையங்களில் நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செரிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அந்த சமயங்களில் சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு (Sombu) நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.

சோம்பு நன்மைகள் – சுவாச நோய்க்கு:
சுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு (Fennel Seeds) விளங்குகிறது.

குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அப்போது நம்மால் சரியாக சுவாசிக்க கூட முடியாது, மிகவும் சிரமப்படுவோம்.

அந்த சமயங்களில் இந்த பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க:
sombu health benefits in tamil: குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு, சில சமயங்களில் குறைந்து விடும்.

தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

சோம்பு பயன்கள் – வாய் துர்நாற்றத்திற்கு சோம்பு:
பொதுவாக நாம் அசைவ உணவுகளை சாப்பிடும்போது அனைவருக்கும் வாய் துர்நாற்றங்கள் அடிக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது.

நாம் ஒவ்வொரு முறை அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் இந்த வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு சோம்பு :
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த பெருஞ்சீரகம் இருக்கின்றது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.

சோம்பு பயன்கள் – நீர்கோர்ப்பு – Sombu Water Benefits in Tamil:
நீர்கோர்ப்பு அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுக்கும்.

பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், பெருஞ்சீரகத்தை நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது  சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம்(Fennel Seeds) இருக்கிறது.

சோம்பு பயன்கள் – மலட்டுத்தன்மை:
இன்றைய காலங்களில் திருமணம் ஆன பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை பிரச்சனை ஆண் – பெண் இருவருக்குமே அதிகம் இருக்கிறது.

இப்பிரச்சனை உள்ளவர்கள் மற்ற மருந்துகளை அதிகம் சாப்பிடும் போது, சிறிதளவு பெருஞ்சீரகங்களையும் சேர்த்து சாப்பிட்டு வருவதால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தை பெற்றெடுக்கும் திறனை ஆண் – பெண் இருபாலரும் பெறலாம்.

கல்லீரலை பாதுகாக்க சோம்பு:
உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.

அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.

சோம்பு நன்மைகள்(sombhu benefits) – மாதவிடாய் காலங்களில்:
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமாக அடிவயிற்று வலி மற்றும் அதிக இரத்த போக்கு இருக்கும்.

அப்போது சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெறும் வாயில் போடு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை சரி செய்கிறது.

நல்ல தூக்கத்திற்கு:
சிலருக்கு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கும், அவர்களுக்கு சரியான தூக்கம் என்பதே இருக்காது.

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தினமும் அதிகளவு பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து வந்தால் பெருஞ்சீரகத்தில் (Fennel Seeds) உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த பெரிதும் உதவுகிறது.

இதுவரை சோம்பு மருத்துவ குணங்கள் பற்றி பார்த்தோம் அல்லவா? இப்போது சோம்பு (Sombu) நன்மை பற்றி இப்பொது நாம் காண்போம்.

சோம்பு மருத்துவ பயன்கள்: (Sombu maruthuvam in tamil)
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.

சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

தூக்கத்தைச் சீராக்கும். சோம்பு தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad