முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு!
இன்று முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் தலைமைச் செயலகம் வந்தார்.
அங்கு அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
அங்கு அவருக்கு மூத்த அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் முக்கிய கோப்புகளை தமிழக தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் எடுத்து வந்தார். அதில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அவர் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து எது என்ற எதிர்பார்ப்பு இருந்தது
*இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 4000 வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் முதல் தவணையாக மே மாதத்துக்கு 2000 ரூ குடும்ப அட்டைக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
*ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மே 16ஆம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும்.
*நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாளை (மே 8) முதலே பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
*100 நாள்களில் நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
*முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment