தமிழக மக்களுக்கு நன்றி.. மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி !!
தேர்தலில் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவித்து மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 6ஆவது முறையாக திமுக ஆட்சி செய்ய கட்டளையிட்டுள்ள மக்களுக்கு நன்றி. திமுகவின் வீசப்பட்ட அவதூறுகளை வாக்குகளாக மக்கள் மாற்றியமைக்கு நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உண்மையாக இருப்பேன், உழைப்பேன் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்கைவாதிகளின் கூட்டணியாக தோள்கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment