கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு!

கோவை பத்திரப்பதிவு அலுவலகர் கண் முன்னே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு!


அரிவாள் மற்றும் மிளகாய் பொடியுடன்‌ கோவை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பலர் நுழைந்ததால் பத்திர எழுத்தர்கள் மற்றும் பதிய வந்தவர்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு


காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பகவதி குமார்- ஹரிபிரியா. இருவரும் மாதம் பட்டியை அடுத்த குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இருவரும் வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொடுத்து அதற்கான வேலைகள் நடந்து உள்ளன.

இரண்டு மணியளவில் அனைத்து வேலையும் முடிந்து இவர்களைப் புகைப்படம் எடுக்கப் பத்திர பதிவாளர் மோகன் குமார் அழைத்துள்ளார். அப்பொழுது திடீரென அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண் வீட்டார் பெண்ணை மட்டும் இழுத்து வெளியே சென்றுள்ளனர்.

பெண்ணின் அண்ணன் கார்த்திகேயன் கையிலிருந்த மிளகாய்ப் பொடியைப் பகவதி குமார் மீது வீசியுள்ளார். அதே சமயத்தில் ஹரி பிரியாவின் தந்தை ராமமூர்த்தி தான் கொண்டு வந்து அரிவாளை வைத்து ஹரி பிரியாவை வெட்டியுள்ளார். அந்த வெட்டை ஹரிப்பிரியாவின் கணவர் பகவதி குமார் வாங்கிக்கொள்ள, கையில் விரல்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பெண் வீட்டார் ஹரிப்பிரியாவை தரதரவென இழுத்துச் சென்றனர்.‌

No comments:

Post a Comment

Post Top Ad