அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்...

அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்...



மதுரை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் லட்சுமணன் கூறியதாவது மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயல்படுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் வங்கி சேவை மையங்கள் செயல்படுகின்றன இதன் மூலம் வங்கி இல்லாத மற்றும் வங்கி சேவை எளிதில் கிடைக்காத கிராமங்களிலும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை பெற்று பயன் அடைகிறார்கள் .



எனவே கொரோனா தொற்று காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் பேமெண்ட்  டிஜிட்டல் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி அனைத்து சேவைகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad