ஆக., 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

ஆக., 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு!

ஆக., 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு!

கோவா மாநிலத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை, ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம் உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கோவா மாநிலத்தில், தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை, வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை நீட்டித்து, பா.ஜ.க.,வைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட வழங்கப்பட்ட அனுமதி தொடர்கிறது.

உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பக்தர்களுக்கு மேல் அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவா மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 144 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad