ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பலி!

ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பலி!



பெல்ஜியம் நாட்டில், ஒரே நேரத்தில் இரண்டு வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பெல்ஜியம் நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 90 வயது மூதாட்டி, இரண்டு வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அரிதானது என்றும் ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அந்த மூதாட்டிக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தனியாக வசித்து வரும் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம், பெல்ஜியம் நாட்டில் ஆல்ஸ்ட் நகரில் உள்ள ஒ.எல்.வி., மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது.
தொடக்கத்தில், அவர் நன்றாக சுவாசித்து வந்துள்ளார். ஆனால், மூதாட்டியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கொரோனாவாலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வகை கொரோனாவாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad