"ஆக்சிஜன் ஆணையர்" - 3வது அலையை சமாளிக்க தமிழக அரசு புது வியூகம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

"ஆக்சிஜன் ஆணையர்" - 3வது அலையை சமாளிக்க தமிழக அரசு புது வியூகம்!

"ஆக்சிஜன் ஆணையர்" - 3வது அலையை சமாளிக்க தமிழக அரசு புது வியூகம்!


கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை சமாளிக்க, ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பதவியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் போது மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழந்ததாக செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக் கூடும் என்றும், அப்போது, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கொரோனா மூன்றாவது அலையை தடுக்க முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.



இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க, ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பதவியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க இந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad