சென்னை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவக்கம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் சேவை, ஜூலை 12 முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, '' சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இறங்கவும், வசதிக்காகவும் வருகின்ற திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடஇடைவெளியில் இயக்கப்படும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அனியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. ஜூன் 21 முதல் ஜூலை 9 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 40 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ. 8000 வசூலிக்கப்பட்டுள்ளதுகொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''.
No comments:
Post a Comment