தமிழ்நாட்டின் அங்கங்களை பிரிக்க நினைத்தால் அவர்கள் தமிழின் எதிரிகள் - பீட்டர் அல்போன்ஸ் காட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

தமிழ்நாட்டின் அங்கங்களை பிரிக்க நினைத்தால் அவர்கள் தமிழின் எதிரிகள் - பீட்டர் அல்போன்ஸ் காட்டம்

தமிழ்நாட்டின் அங்கங்களை பிரிக்க நினைத்தால் அவர்கள் தமிழின் எதிரிகள் - பீட்டர் அல்போன்ஸ் காட்டம்

கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் சிந்தனையில் ஒன்றிய அரசு இருந்து வருவதாக குறிப்பிட்ட பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதற்கு சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருவதுடன், ''தனி தமிழ்நாடு'', ''கொங்குநாடு'' ''கொங்குநாடாவது_மயிராவது'' ஆகிய ஹேஸ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ்நாட்டை பிரிக்கும் பிரிவினைவாத செயலில் ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன், ''மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே ஒன்றிய அரசு செயல்படுத்தும் என்றும் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை ஒன்றிய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்றும்'' தெரிவித்துள்ளார்.
பாஜகவினரின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், '' கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.
கொங்குநாடு,செட்டிநாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்!'' என இவ்வாறு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad