போராட்டம் தொடரும்: ம.நீ.ம., தலைவர் கமல் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என நடிகரும்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில், வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது. தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
No comments:
Post a Comment