யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு!

யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு!

தமிழக பாஜக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த யூடியூபர் மதன் தனது மதன் டைரீஸ் சேனலில் வெளியிட்டார். இது கடுமையான அதிவர்லைகளை ஏற்படுத்திய நிலையில், கே.டி.ராகவன் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அந்த வீடியோவை மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாகவும் மதன் கூறியிருந்தார்.

ஆனால், வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மதன் மறுத்துடன் வீடியோவை வெளியிட்டு விட்டதாக அறிக்கை மூலம் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து, வீடியோ வெளியிட்ட மதன், வென்பா ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கபப்ட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையிடம் வீடியோவை காண்பித்து அவரது ஒப்புதலுடனேயே வீடியோவை வெளியிட்டதாக கூறி, அண்ணாமலையை சந்தித்தபோது, அவருடன் நடைபெற்ற உரையாடல் என்று ஆதாரமாக மற்றொரு வீடியோ ஒன்றை மதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்று கே.டி.ராகவனுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதை எல்லாம் பற்றி பேச கூடாது. இதெல்லாம் ஒரு சமூக குற்றமா?யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.டி.ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம் என்று சுட்டிக்காட்டியுள்ள சீமான், அறைக்குள் நடந்த தனிப்பட்ட விஷயத்தை பதிவு செய்வது சமூக குற்றம். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பேசுகையில், “சட்டமன்றத்துக்குள் ஆபாச காட்சிகளை பார்ப்பது தவறு. அப்படி ஏதாவது நடந்தால் தவறு. நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் செய்ததை பதிவு செய்து வெளியிடுவது தவறு. கேடுகெட்ட சமூகம் ஆகிவிட்டோம் நாம். யார் யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, அதை பதிவு செய்வது, வெளியிடுவது தவறு. இதனால் என்ன சாதிக்க முடியும், இதை வைத்து என்ன செய்ய போகிறார்கள். இதெல்லாம் பிரச்சனையா? சமுதாயத்தில் அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad