1 - 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

1 - 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் சொன்ன தகவல்!

1 - 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்பட இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, கடந்த 1 ஆம் தேதி முதல், 9 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி அறிக்கையும் சமர்ப்பித்து உள்ளார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் காளப்பட்டியில், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
மாநிலம் முழுவதும் முதலமைச்சர் வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். கல்வியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல இது போன்ற தன்னார்வலர்கள் முன்வருகின்றனர். பணமாக கூட வேண்டாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான 4 இருக்கைகள் கூட வழங்கலாம். ஊடகங்கள் மூலம் இது போன்ற நல்ல செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பல முறை குரல் கொடுத்து உள்ளோம். கூட்டத்தொடரில் கூட அனைத்து கட்சி சார்பில் ஒருமனதாக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது பா.ஜ.க., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சட்ட ரீதியாக பாதிப்பை பார்த்து ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன நிலையில், பின்பு அக்கட்சி வெளிநடப்பு செய்தது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

நீட் தேர்வு தகுதியான முறையில் நடைபெறுவதில்லை என்பதற்கு மஹாராஷ்டிரா நீட் தேர்வில் மோசடி விவகாரம் உதாரணம். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்பட இல்லை. ஒவ்வொரு மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா பரவல் ஒவ்வொரு மாதிரி உள்ளதால் வல்லுநர்களை கேட்டு முடிவெடுப்போம்.



தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக வர சொல்லக்கூடாது என நீதிமன்றமும், அரசும் வலியுறுத்தி உள்ளோம். மாணவர்கள் ஏன் வரவில்லை என்பது கூட, மாணவர்களின் இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காக விளக்கம் கேட்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad