தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,575 பேர் பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,575 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,575 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஆயிரத்து 568 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று, ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1 லட்சத்து 61 ஆயிரத்து 231 மாதிரிகள் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 21 ஆயிரத்து 86 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4 கோடியே 29 லட்சத்து 55 ஆயிரத்து 137 மாதிரிகள் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 895 பேர் ஆண்கள், 680 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 30 ஆயிரத்து 428 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 620 ஆகவும் அதிகரித்து உள்ளது. ஆயிரத்து 610 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 69 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad