தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு: முதல்வர் அதிரடி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு: முதல்வர் அதிரடி..!

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு: முதல்வர் அதிரடி..!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய
ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிக்கப்ட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

* செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.

* 3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

* பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை நீடிக்கப்படுகிறது.

* கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad