குஜராத் அடுத்த முதல்வர் யார்? - பிரதமர் மோடி "டிக்" அடிக்கப் போகும் பெயர் இது தான்!
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி, இன்று யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது
தொடர்பான ராஜினாமா கடிதத்தை, மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத்தை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ரூபானி, தனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார். புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க., தேசியத் தலைமையின் கீழ் கட்சிப் பணியை தொடருவேன் என, தெரிவித்தார்.
விஜய் ரூபானியின் ராஜினாமா அறிவிப்பு வெளியானதற்கு பிறகு, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பர்ஷோட்டம் ருபாலா, குஜராத் மாநில பா.ஜ.க., மேலிடப் பொறுப்பாளர் புபேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில், பா.ஜ.க. அவசரக் கூட்டம் நடைபெற்று உள்ளது.
அதில், பா.ஜ.க. மேலிட உத்தரவுப்படியே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக, விஜய் ரூபானி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சருக்கான பந்தயத்தில், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள், குஜராத் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், குஜராத் விவசாயத் துறை அமைச்சர் ஃபல்டு, லட்சத்தீவு யூனியன் பிரதேச அதிகாரி பிரபுல் கோடா படேல் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குஜராத்தி அல்லாத ஒருவரும் முதலமைச்சருக்கான பரிந்துரை பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment