தமிழின் தாயகம் என்ற பெருமையை பெற்றது இந்தியா - அண்ணாமலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

தமிழின் தாயகம் என்ற பெருமையை பெற்றது இந்தியா - அண்ணாமலை

தமிழின் தாயகம் என்ற பெருமையை பெற்றது இந்தியா - அண்ணாமலை

மகாகவி பாரதியாரை போற்றும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அதில், பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதை தொடர்ந்து அந்நாளில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில்
கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்‌. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத்
தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் உள்ளிட்ட 14 அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் இன்று (செப்டம்பர் 11) நூறாவது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது ட்விட்டர் பதிவில் ''வாராணசியின் பல்கலைகழகத்தில், (BHU) உலகித்தின் தொன்மையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மகாகவி பாரதியார் பெயரில் ஒரு “Chair” அமைக்கப்படுகிறது. பாரதி மறைந்து 100 வருடமான இன்றைய தினத்தன்று பிரதமரின் அறிவிப்பு'' என கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை '' உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது! இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும்!'' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad