அதையும் செய்வோம், இதையும் செய்வோம்: பேச்சில் கெத்து காட்டிய ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

அதையும் செய்வோம், இதையும் செய்வோம்: பேச்சில் கெத்து காட்டிய ஸ்டாலின்

அதையும் செய்வோம், இதையும் செய்வோம்: பேச்சில் கெத்து காட்டிய ஸ்டாலின்

'ஆனைப்புளி' பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
என்ன?


சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மர கல்வெட்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் புராதன சின்னமான ஆனைப்புளி பெருக்கமரத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.


இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “வானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க்கும் அமைப்போம், ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை கைதூக்கி விடும் அரசாக திமுக அரசு உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 10 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “குடிசைகளை மாற்றி அடுக்குமாடிகளை கட்டித்தர வேண்டும் என்ற பணிகளை அரசு செய்து வருகிறது. அனைவரது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad