பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2021-2022ம் ஆண்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரை, பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் வரை ஒன்றிய அரசும், 60 முதல் 65 சதவீதம் வரை மாநில அரசு பங்குடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில், நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, வேளாண்மை - உழவர் நலத்துறையால் கடந்த மாதம் 26ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிர், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்கள் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு கடன்பெறும் விவசாயிகள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன்பெறா விவசாயிகள் “பொது சேவை மையங்கள்” மூலமாகவும் கடந்த 23ஆம் தேதி முதல் ஒன்றிய அரசின் தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

இப்பயிர்கள் காப்பீடு செய்வதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 26ஆம் தேதியன்றே வெளியிடப்பட்டு விவசாயிகள் காப்பீடு செய்ய ஏதுவாக 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வது குறித்தான நடப்பு தகவல்களை “உழவன்” செயலி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அலுவலர்களை சந்தித்து தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad