என்னது பாஜகவா? அப்ப யாராலும் காப்பாற்ற முடியாது - திருமாவளவன் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

என்னது பாஜகவா? அப்ப யாராலும் காப்பாற்ற முடியாது - திருமாவளவன் ஷாக்!

என்னது பாஜகவா? அப்ப யாராலும் காப்பாற்ற முடியாது - திருமாவளவன் ஷாக்!

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்றெல்லாம் அடையாளப்படுத்தும் நபர்களுக்கு இடையில், அவரை சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளம் என்று நிலைப்படுத்துகிற தமிழக அரசின் புரட்சிகர நடவடிக்கை போற்றுதலுக்கு உரியது. பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடு தான் சனாதனம்.

சமூக நீதி நாள் கொண்டாட்டம்

அவற்றைப் பரப்பி, அதனால் இன்று வரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார். இந்நிலையில் தான் தமிழக அரசு பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்துள்ளது. இது சனாதனத்துக்கு எதிராக சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கோட்பாட்டு யுத்தமே ஆகும். எனவே இன்று எனது அறைகூவலை ஏற்று சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இந்த கோட்பாட்டு அறப்போரில் களமிறங்கி உறுதி மொழியேற்ற யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குவதாக தெரிவித்தார்.

எதற்காக சமூக நீதி?

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டியில் ”சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சமூக நீதி கருத்தியல் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதி கருத்தியல் தான் நமக்கான அடையாளம். எதற்கு சமூக நீதி? சமூகத்தை வலிமைப்படுத்துவதற்கு. எப்படி வலிமைப்படுத்துவது? அதிகாரம் கொண்ட சமூகமாக வலிமைப்படுத்துவது.

பாஜக ஆட்சி வேண்டாம்

தலித் சமூகத்தை, பழங்குடியினத்தவரை, பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சமூகங்களை அதிகாரம் கொண்டதாக ஆளாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலித் வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டதாக பாஜக பெருமை பேசி வருகிறது. ஆனால் அவரை ஒரேயொரு நாள் பிரதமராக்க முடியுமா? இங்கு தான் அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விசிக என அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக செயல்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் எதிர்வரும் மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும். பாசிச சக்திகளை தோற்கடித்து விட முடியும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad