பேரறிவாளன் பரோல் மேலும் நீட்டிப்பு: விடுதலை எப்போது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

பேரறிவாளன் பரோல் மேலும் நீட்டிப்பு: விடுதலை எப்போது?

பேரறிவாளன் பரோல் மேலும் நீட்டிப்பு: விடுதலை எப்போது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 28ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் ஆளுநரும், குடியரசுத் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் 28ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிகிறது.

இந்த நிலையில் 5ஆவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனின் உடல் நலன் கருதி சிறை விடுப்பை அக்டோபர் 26ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad