3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல
மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு அரபிக் கடலுக்கு நகரக்கூடும். இதையடுத்து, அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திரைசியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
No comments:
Post a Comment