நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 18, 2021

நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  
 
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad