குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 25, 2021

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த சில மணி நேரங்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தென்காசி மாவட்டத்திற்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் கடும் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad