தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடுத்தொகை நிலுவை: நிதியமைச்சகம் தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 6, 2021

தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடுத்தொகை நிலுவை: நிதியமைச்சகம் தகவல்

தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடுத்தொகை நிலுவை: நிதியமைச்சகம் தகவல்

தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது என நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,894 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது என்று கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தின் நிதி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது
மேலும் இந்த நிதியாண்டில் மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரத்து 154 கோடி நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது
ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad