திருப்புதல் தேர்வில் ட்விஸ்ட்: மாணவர்களே, இதை எதிர்பார்க்கலைல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

திருப்புதல் தேர்வில் ட்விஸ்ட்: மாணவர்களே, இதை எதிர்பார்க்கலைல!

திருப்புதல் தேர்வில் ட்விஸ்ட்: மாணவர்களே, இதை எதிர்பார்க்கலைல!


10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்து தேர்வுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு 10ஆம் தேதி வரை தமிழக அரசு தடை விதித்தது. 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளும் தடை விதித்தது.


ஆனால் பொதுத் தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்து தேர்வுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி, திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது என்றும், ஒரே பள்ளியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல், வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பொதுத் தோவு நடத்துவதை போன்றே, திருப்புதல் தேர்வுகளையும் நடத்த வேண்டும்.

விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து, திருத்திக் கொள்ள வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டுக்கு வழங்கக் கூடாது. விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பள்ளி கல்வித் துறையின், 'எமிஸ்' மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பின்னா் அறிவிக்கப்படும். திருப்புதல் தேர்வுகளை புகாா்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad