உடலுறுப்புகள் திருட்டு... கோவை தனியார் மருத்துவமனை மீது பெண் பரபரப்பு புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

உடலுறுப்புகள் திருட்டு... கோவை தனியார் மருத்துவமனை மீது பெண் பரபரப்பு புகார்!

உடலுறுப்புகள் திருட்டு... கோவை தனியார் மருத்துவமனை மீது பெண் பரபரப்பு புகார்!


பிரபல தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக கூறி பெண் ஒருவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் பிரவீனா. இவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

எனது தாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால் சுந்தாரபுரத்தில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் (FIMS HOSPITAL) கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்தோம். மே மாதம் வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனது தாயின். உடல்நிலை குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் ஒரு நாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த கூறினர்.

இந்த நிலையில் மே மாதம் 3 ஆம் தேதி எனது தாயை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல் சில நோயாளிகளையும் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் எனது அம்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காரணம் இல்லாமல் எனது தாயை வேறுஇடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடல் உறுப்புகளை திருடுவதற்காக வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாக மருத்துவமனையில் உள்ள சிலர் எங்களிடம் ரகசியமாக கூறினர். மேலும் எனது அம்மாவின் நகையும் காணாமல் போயிருந்தது.

இது குறித்து கேள்வி கேட்ட என்னை மிரட்டி எனது செல்ஃபோனை உடைத்தனர். பின்னர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியதோடு, என்னிடம் இருந்த ஆதாரங்களை அங்கிருந்த போலீசார் அழித்துவிட்டனர்.

பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையம் வந்து, எங்களை கொலை செய்வதாக மிரட்டினர். இதுகுறித்து போலீசாரிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரலீனா பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே ஃபிம்ஸ் மருத்துவமனையில் (FIMS HOSPITAL) பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக கூறி அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad