போதைப் பொருள் கடத்தல்.. ரஷ்யாவை சேர்ந்தவருக்கு ஜெயில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

போதைப் பொருள் கடத்தல்.. ரஷ்யாவை சேர்ந்தவருக்கு ஜெயில்!

போதைப் பொருள் கடத்தல்.. ரஷ்யாவை சேர்ந்தவருக்கு ஜெயில்!


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரஷ்யாவை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை.
போதைப் பொருள் கடத்திய வழக்கில் ரஷ்யாவை சேர்ந்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வசித்த ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் கடந்த 2011ஆம் ஆண்டு மூலிகை மருந்து எனக் கூறி போதைப்பொருட்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்பி வந்ததை அறிந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப் பொருள் கடத்தியதாக அலெக்சாண்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 5 சட்டப்பிரிவுகளுக்கு தனித்தனியாக 18 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.



No comments:

Post a Comment

Post Top Ad