Pandian Stores: நினைத்ததை சாதித்து காட்டிய மீனா.. குழப்பத்தில் தவிக்கும் முல்லை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 25, 2022

Pandian Stores: நினைத்ததை சாதித்து காட்டிய மீனா.. குழப்பத்தில் தவிக்கும் முல்லை!

Pandian Stores: நினைத்ததை சாதித்து காட்டிய மீனா.. குழப்பத்தில் தவிக்கும் முல்லை!


பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ரூமிற்கு வந்து சாப்பிட கூப்பிடும் போது மீனா அவளை திட்டுகிறாள். தனம், அவர்களிடம் தயவுசெஞ்சு சண்டை போடாதீங்க. ஆம்பளைங்க இப்போ தான் கடைல இருந்து வந்து சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க. உங்க சண்டையை தீர்த்து வைக்குற வேலை அவுங்களுக்கு இல்லை என சொல்கிறாள். மீனா அவளிடம் நான் இவளை பார்க்க கூடாதுன்னு தான் இங்க உட்கார்ந்து இருக்கேன். நான் ஜீவா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
என்னை பேசுன மாதிரி உங்களை பேசி இருந்தா சும்மா இருந்துருப்பீங்களா என கேட்கிறாள். தனம் நம்ம இப்போ சாப்பிடலாம் மீனா. நாளைக்கு இதைப்பற்றி பேசலாம் என சொல்கிறாள். மீனா, என்னால வர முடியாது அக்கா. இவ மன்னிப்பு கேட்காம ஒரு வாய் சோறு நான் சாப்பிட மாட்டேன் என சொல்கிறாள். உடனே ஐஸ்வர்யாவும் இப்போ நான் மன்னிப்பு கேட்கணும் அவ்வளவு தான. நான் பண்ணது தப்புதான். என்னை மன்னிச்சுடுங்க என சொல்கிறாள்.

அதன்பிறகு அவர்களை நீங்க போங்க. நான் சாப்பிட வர்றேன் என சொல்லி வெளியே செல்கிறாள் மீனா. அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின்னர் கிச்சனில் முல்லையிடம் தனம் எதுவும் பயம் இல்லைல. டாக்டர் நல்லதா தான் சொல்லுவாங்க என்கிறாள். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது மீனா அங்கு வருகிறாள். முல்லையிடம் ஐஸ்வர்யா பற்றி சொல்லிவிட்டு, டாக்டர் என்ன சொன்னாங்க என விசாரிக்கிறாள்.

அதன்பின்னர் அவளிடம் எதுவும் யோசிக்காதீங்க முல்லை. எனக்கு தெரிஞ்சவங்க எல்லாருக்கும் பல வருஷம் கழிச்சு குழந்தை பிறந்து இருக்கு என தைரியம் சொல்கிறாள். அதன்பின்னர் ரூமில் மீனாவிடம், உனக்கும் அந்த பிள்ளைக்கும் என்னடி பிரச்சனை என விசாரிக்கிறான் ஜீவா. அதற்கு மீனா எனக்கு அவளுக்கும் மட்டும் இல்லைடா. வீட்ல இருக்க எல்லார் கூடயும் பிரச்சனை என சொல்கிறாள். அவனும் இது உங்க பிரச்சனை பார்த்துகோங்க என சொல்கிறாள்.

அதன்பின்னர் ஜீவா, முல்லைக்கும் கதிருக்கும் எதுவும் பிரச்சனையா என கேட்கிறான். உனக்கு எதுவுமே தெரியாதாடா? என கேட்டு அவர்கள் ஹாஸ்பிட்டல் போனது பற்றியும், முல்லை பயப்படுவதை பற்றியும் சொல்கிறாள். இதான் கதிரும் கடைல டல்லா இருந்தானா என கேட்கிறான் ஜீவா. மீனா சொல்வதை கேட்டு வருத்தப்படும் ஜீவா, நான் போய் கதிர்க்கிட்ட பேசுறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறான்.இதனிடையில் கதிரும், முல்லையும் வீட்டின் பின்னாடி நின்று பேசி கொண்டிருக்கின்றனர். இரண்டு பேரும் நிற்பதால் இப்போ போய் எப்படி பேசுறது என தயங்கி நிற்கும் போது, கதிர் அவனை பார்த்து கூப்பிடுகிறான். அதன்பின்னர் அவன் மீனா இப்போ தான் நீங்க ஹாஸ்பிட்டல் போன விஷயத்தை சொன்னா எனக்கூறி ஆறுதல் சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad