பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு..... வாட்ஸ் அப் வைரல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 24, 2022

பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு..... வாட்ஸ் அப் வைரல்

2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு
பிடித்த பேச்சாளர் - சீமான்

பிடித்த இயக்குநர் - அட்லீ

பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்

பிடித்த இசையமைப்பாளர் - அனிருத்

பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்

பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்

பிடித்த சொல் - மொக்கை

பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
 
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...

சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..

பெண்கள் மீது மரியாதையே இல்லை..

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...

சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..

ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..

ஒரு வரி கூட வாசிப்பதில்லை..

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..

பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் சுயமி எடுத்து முகநூலில் போட வேண்டும்..

பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..
சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..

ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....

இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..

பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..

பெற்றோர்கள் சுத்தம்; அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..

தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...

அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....

இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..

கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்‌‌..

நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...

இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..

மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நான் தேங்கி விட்ட பேராசிரியனோ, தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கிற பேராசிரியனோ இல்லை. எல்லாவிதத்திலும் என்னை புதுப்பித்துக் கொள்கிறவன்..இப்போது 2K Kids யும் கூட வகுப்பறைகளில் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பலரை இலக்கியத்தின் பக்கம் கூட அழைத்து வந்திருக்கிறேன். நான் பேசுவது 2k kids ன் பொதுமனநிலை குறித்துதான்.. விதிவிலக்குகளை அல்ல.. பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
 
காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள். எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும். சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள். காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தம் இதுதான். காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக்கிறோம்

கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.

மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.

பயமாக இருக்கிறது...இன்றைய தலைமுறையின் போக்கு.....

தற்போது இந்த செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad