தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – விருப்பமுள்ள மாணவர்கள் எழுதலாம்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்க மதிப்பெண் கட்டாயம். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்கள் தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் அந்தந்த பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அனைவர்க்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் குறைந்தபட்சமாக 35 மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வுகள் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எழுதுவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment