22.4.2021 ன் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.22) 12 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 7,526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.34 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று (ஏப்.,22) 12,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,37,711ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-194) மூலமாக, இன்று மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 653 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 863 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 7,583 பேர் ஆண்கள், 5,067 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,26,392 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,11,281 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 7,526 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 966 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 59 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 39 பேர் தனியார் மருத்துவமனையிலும் 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,317 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment