பிளஸ் 2 பொதுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்
நாடு முழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொது செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெற்ற
இந்நிலையில் புதுச்சேரியில் செய்முறை தேர்வு நடந்துமுடிந்த நிலையில் , மறு உத்தரவு வரும் வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது என்றும், திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு, தமிழக கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment