55 மணி நேர ஊரடங்கு புதுச்சேரியில் அமல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

55 மணி நேர ஊரடங்கு புதுச்சேரியில் அமல்!

55 மணி நேர ஊரடங்கு புதுச்சேரியில் அமல்!



நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் அதனைத் தடுப்பதற்காக புதுச்சேரியில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதனை தடுக்க தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை தாண்டி வேறு வழியின்றி பொதுமுடக்கத்தையும் மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளன.

அந்த வகையில் வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வார இறுதி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.வடமாநிலங்களில் பரவல் கற்பனைக்கு எட்டாத வகையில் இருப்பதால் விதிகள் கடுமையாக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை ஞாயிறு முழு பொதுமுடக்கம் அமலுக்கு வர உள்ளது.



அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அந்த வகையில் நேற்று இரவு 10 மணிக்கு புதுச்சேரியில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. திங்கள்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து 55 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால் அதில் சில தளர்வுகளும் உள்ளன.

அதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமென்றும், பயணிகள் என்றால் டிக்கெட் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad