இன்றைய செய்திகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 28, 2021

இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்


**அரசு ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசிடம் கோரிக்கை

**சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு  வாட்ஸ்அப் குழுவின் அட்மின் பொறுப்பல்ல உயர்நீதிமன்றம் தீர்ப்பு

**CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்.

**மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.               

**கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு - இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு

**முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலி – மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

**கற்போம் எழுதுவோம் இயக்கம்: ஜூலை வரை நீட்டித்து உத்தரவு

**புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன..

**அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. 

**தமிழகத்தில் அஞ்சல்  நிலையங்கள் இனி மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்  என அறிவிப்பு.

**கொரோனா  தடுப்பு பணி - 24 மணி நேர  கட்டுப்பாடு அறை சிறப்பு பணிக்கு சுழற்சி முறையில் 24 ஆசிரியர்களை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

**அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

அலுவலக வளாகத்தில் கட்டாயம் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழக அரசு

**பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும்:

தமிழக அரசுக்கு ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்

**மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அரசு ஊழியர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி அல்லது கொரோனா சோதனை கட்டாயம்: தலைமை தேர்தல் அதிகாரி                                                    

  **ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவலாம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.

**ஊரடங்கை எப்போது, எவ்வாறு அமல்படுத்த வேண்டும்?- மாநிலங்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிகள் வெளியீடு.                                                        

 **சுற்றுச்சூழலை காத்ததற்கு கவுரவம்-விவேக் பெயரில் தபால் தலை: பரிசீலிக்கும் மத்திய அரசு.

**10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு.

**டெல்லியில் ஆக்சிஜன் சப்ளை முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது

டெல்லி அரசாங்கம் என்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை? இவ்வளவு அசாதாரண சூழல் நிலவுகிறது இதற்காக உடனடியான ஒரு வழிமுறையை கூட உங்களால் உருவாக்க முடியாதா 

டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

**கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

விதிகளை மீறினால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் கொரோனா  சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியில் சுற்றும் கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் தனிமை முகாமிற்கு மாற்றப்படுவார் என மாநகராட்சி கூறியுள்ளது.

**நாட்டு மக்கள் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய வசதிகளை செய்து தர சொல்லி உத்தரவிட்டது யார்?

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாரும் இத்தகைய வசதிகளை கேட்கவில்லை 

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது குடும்பம் கொரோனா பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் உருவாக்கப்பட்ட விவகாரம்

யாரைக்கேட்டு இந்த உத்தரவை பிறப்பித்தீர்கள் என டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி.

**ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் - ஸ்டாலின்                                                                 

  **மே 1 மற்றும் 2ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை

திட்டமிட்டபடி மே 2 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

வாக்கு எண்ணிக்கை மையத்தில்  செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஐகோர்ட்டில் அறிக்கை தருவோம்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

**ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.                                                                                   

**கால நீட்டிப்பு கோர மாட்டேன்.

விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வேன்.

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் குழுவின் அதிகாரி கலையரசன் தகவல்

**இந்தியாவின் மோசமான நிலைமை குறித்து நாங்கள் கவலையுறுகிறோம்

இந்தியா அதன் குறிப்பிட்ட தேவைகளைச் சொன்னால் நாங்கள் உதவ ஆயத்தமாக  இருக்கிறோம்

சீன வெளியுறவுத் துறை அறிவிப்பு

**அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்க அமெரிக்க அரசு முடிவு !

60 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு.

**இந்தியா எங்களுக்காக இருந்தது, நாங்கள்

அவர்களுக்காக இருப்போம்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என பிரதமர் மோடிக்கு உறுதி அளித்தேன்.

-பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட்

**கொரோனாவைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

**மே 1 முதல் 50 % பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் உத்தரவு.

**55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது

இதய நோய்,  சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும். 

-ஊரக வளர்ச்சி துறை உத்தரவு

**நாள் ஒன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது பூட்டான் நாடு 

**இந்தியாவின் கொரோனா தொற்று நிலைமை குறித்து தைவான் தீவிர அக்கறை கொண்டுள்ளது.

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

இந்திய நண்பர்களுக்கு தேவையான அவசர உதவிகளை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

- தைவான் வெளியுறவுத்துறை

**கிரிக்கெட் வீரர் நடராஜன் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி - நடராஜன்

**இன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து அமைச்சர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்.

**கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு உதவ ஆஸ்திரேலிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.

500 வென்டிலேட்டர்கள், 10 லட்சம் சர்ஜிக்கல் மாஸ்க்குகள், 5 லட்சம் P2 & N95 மாஸ்க்குகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை வழங்க முடிவு.

**மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

**ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ள 'அவசரமாக தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன், மருந்து (ம) மருத்துவ உபகரணங்கள்' அடங்கிய கப்பல் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வந்து சேரும் - ஐரோப்பிய ஆணையம்

**புதுச்சேரி பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்கள் மூடல்.

கொரோனா காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து 28 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை மேலும் 3 நாட்கள் மூடப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

**ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ, இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.41 லட்சம் (1 Bitcoin) தருவதாக அறிவித்துள்ளார்.

**3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு 

- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம்

**இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கும் முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல்.

No comments:

Post a Comment

Post Top Ad