ஹலோ நான் சசிகலா பேசுறேன்; புது ரூட்டுக்கு எஸ்கேப் ஆகும் மாஜிக்கள்!
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஜனவரியில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா. இதையடுத்து தலைகீழாக மாறியிருந்த அதிமுகவை தன்வசப்படுத்துவார். தலைமை பொறுப்பில் அமர்ந்து அதிரடி காட்டுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது அவரது தொண்டர்களை மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் ஜெயலலிதா உடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் செய்தவரால் அவ்வளவு எளிதாக ஒதுங்கியிருக்க முடியாது.
No comments:
Post a Comment