ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவு
ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவு பிறப்பித்து கோடைகால விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராஜாக்கிளி, மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2021 ஜனவரி 18-ம் தேதியிலிருந்து தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தாக்கம் கொரோனா அதிகரிப்பின் காரணமாக அரசு 9,10,11 வகுப்பு மாணவர்கள் மட்டும் அனைவரும் தேர்ச்சி எனவும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி செயல்படும் என அறிவிப்பு வெளியானது.
ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் கீழ் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றுள்ளது. இச்சூழ்நிலையில், தமிழகத்தில் அதிதீவிரமாக அதிகரித்து வரும் தாக்கத்தினால் பள்ளிகள் தோறும் ஆசிரியர்கள், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைத்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி எனவும், 12ம் வகுப்பு தேர்வை தள்ளியும் வைத்துள்ளது. கல்லூரியிலும் நேரடித் தேர்வு அல்லாமல் ஆன்லைன் மூலம் தேர்வு மாற்றப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாள்களில் இரவுநேர ஊரடங்கு என பல அறிவிப்புகள் வந்துள்ளன. அதனால் பள்ளி ஆசிரியர்களை மட்டும் பணிக்கு வர சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனா அச்சத்துடன் பஸ்களில் பயணித்து பள்ளிகளுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவு பிறப்பித்து கோடைகால விடுமுறையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment