ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு, வரும், 25ல் நடக்க இருந்த பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள, ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் தேதி வரை, திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.ஏராளமானோர் விண்ணப்பித்தனர். கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஆள் சேர்ப்பு முகாம், இந்தாண்டு, பிப்., 10 முதல், 26ம் தேதி வரை நடந்தது. இந்த முகாமில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சென்னை மாநில கல்லுாரியில், 25ம் தேதி, பொது நுழைவுத் தேர்வு நடைபெற இருந்தது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment