தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே
தமிழகத்தில் கரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 25 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் மே 8 முதல் 31 வரை 37 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதில் 25 ரயில்கள் தமிழகத்திற்கு வந்துபோகும் ரயில்கள் ஆகும்
No comments:
Post a Comment