பிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

பிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நிலவரம் தொடர்பாக, காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான ஆலோசனை குறித்து, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுவது போல், பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். கொரோனா விவகாரத்தில், மாநிலங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடி பேசியிருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

முதலமைச்சர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை, அவர் காது கொடுத்து கேட்பதில்லை. ஆலோசனையின் போது பிரதமர் மட்டுமே பேசுகிறார். எங்களை பேச விடுவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பா.ஜ.க மூத்தத் தலைவர் பாபுலால் மரன்டி வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவு:

ஜாரக்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், பிரதமர் மோடி மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டி வருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad