உண்டியலை பார்த்து ஷாக்கான திருப்பதி தேவஸ்தானம்; - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

உண்டியலை பார்த்து ஷாக்கான திருப்பதி தேவஸ்தானம்;

உண்டியலை பார்த்து ஷாக்கான திருப்பதி தேவஸ்தானம்;


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை குறைந்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது நண்பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.

வரும் நாட்களில் கோவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு அடுத்தகட்டமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நேரத்தில் வந்தால் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரிசன டிக்கெட்களை காண்பித்தால் அலிபிரி சோதனைச் சாவடியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad