திமுகவிற்குள் வருகிறார் முக அழகிரி: பேச்சுவார்த்தை சக்சஸ் டீல் ஓகே!
தமிழ்நாட்டில் எதிர்பார்த்திடாத அளவு பெரும்பான்மையோடு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் திமுக கணிசமான இடங்களைப் பிடித்துள்ளது. குறிப்பாக மதுரையில் 5க்கு 5 என அதிமுகவும் திமுகவும் இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இதற்கிடையே இப்போதைய நேரத்தில் முக அழகிரி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே 2021 தேர்தல் நேரத்தில் மதுரை மண்ணில் திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தரப்பினரால் கடந்த முறையைப் போல் எழுப்பப்படவில்லை.
அழகிரி ஏரியாவுக்கு சென்று திமுக எம்பி கனிமொழி வலிமையான பிரச்சாரங்களை மேற்கொண்டபோதும் எந்தவிதமான எதிர்க் கருத்தும் எழவில்லை. இது இப்படியிருக்க என்னவென விசாரித்தபோது, தேர்தல் முடிந்ததும் நமக்குப் பதவி இருக்கு, ஸ்டாலின் முதல்வராவதுதான் இப்போதைய தேவை என்றனர்.
அதேவேளை இந்த தேர்தல் முடிவுகளை திமுகவைவிட மிக ஆவலாக முக அழகிரி ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். காரணம் அரியாசனத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்தப் பிரச்சினையுமின்றி ஏறினால், அது அழகிரியைக் கட்சிக்குள் வரவழைக்கும் என ஒப்பந்தம் பேசப்பட்டிருந்ததாம்.
நமக்குக் கிடைத்த திமுகவிற்குள் முக அழகிரி நிச்சயம் 6 மாத கால இடைவெளியில் இணைக்கப்படுவார் எனத் தெரிகிறது. திமுகவின் இந்த நடவடிக்கை மாநிலத்தில் கட்சியின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகிரி கட்சிக்குள் மீண்டும் வரவுள்ளதையடுத்து மாவட்ட பொறுப்பாளர்கள் இப்போதே அழகிரியை முன்னிலைப்படுத்தி போஸ்டர்களை மாவட்டத்தில் ஒட்டத் தொடங்கிவிட்டனர்.
No comments:
Post a Comment